" நீயே பரிபூரண நித்தியம் "

Question & Answers


வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்?விழிப்பின் அவசியம் என்ன?எதற்காக விழிக்க வேண்டும்?

December 3, 2022 | 213 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான் தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா தற்போது?

Continue Reading

வணக்கம் ஜியெம், எது அறிவு?

November 30, 2022 | 199 views |



ஜியெம்: அறிவு என்பது பொருள் சார்ந்தது அல்ல! தன்னை பற்றிய அறிவு, தன் இருப்பை பற்றிய அறிவு. அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் அல்லவா? இந்த இருப்பை பற்றிய அறிவு. நான் இருக்கிறேன் அமைதி நிலையில் என்கிற அறிவு. நான்

Continue Reading

நான் சில விஷயங்களை மறக்க நினைக்கிறேன். ஆனால் என்னை சுற்றிருப்பவர்களால் மீண்டும் அந்த நினைவுகளால் பாதிக்கப்படுகிறேன். இதை கடந்து செல்வது எப்படி?

November 25, 2022 | 255 views |



ஜியெம்: இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? இங்கு நான் என்பது உன் வடிவம் தான் என்கிற அடையாளத்தில் தான்....... இல்லையா? உனது வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? உன் சுய அறிவில் தானே? உன் வடிவம் மட்டுமன்றி, அனைத்து வடிவங்களும், காட்சிகளும், நிகழ்வுகளும்

Continue Reading

வணக்கம் ஜியெம், பிரபஞ்சம், உலகம், காணும் வடிவங்கள் அனைத்தும் நிஜமாக தோன்றுகிறதே, இவையெல்லாம் எப்படி கனவாகும்,எனது வடிவம் உட்பட?

November 23, 2022 | 206 views |



ஜியெம்: உலகம் எங்கே உளது? உன் சுய அறிவில் தானே! உன் சுய அறிவில் தான் பிரபஞ்சம், கோள்கள், அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது என முதலில் அறியவும். தனித்த அடையாளத்தில் தடுமாற்றமே! உன் சுய அறிவில் தான் இங்கு அனைத்தும் நிகழ்கிறது

Continue Reading

வணக்கம் ஜியெம், அனைத்தில் இருந்தும் ( வடிவம், எண்ணங்கள், உலகம்…) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

November 19, 2022 | 305 views |



ஜியெம்: நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் தானே? சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்! முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய அறிவு என

Continue Reading

வணக்கம் ஜியெம், விதையில் மரம் மறைந்து இருப்பது போல, சுதந்திரம் எனக்குள் மறைந்துள்ளது எனில் அது வெளிப்பட்டு வளர நான் என்ன சாதகம், பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்?

November 16, 2022 | 328 views |



ஜியெம்: உன் சுதந்திர தன்மையை அறிய எந்த சாதகமும் தேவை இல்லை. உன் சுய அறிவில் (Consciousness) நிலைத்து இருந்தால் அதுவே போதுமானது. சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது எது இங்கே? இங்கே எது உள்ளது? உன் சுய அறிவைத்

Continue Reading

வணக்கம் ஜியெம், கடந்த காலம் என ஒன்று இல்லவே இல்லை…. இக்கணமே புதிதாய் பிறந்துள்ளோம்…. இதை விளக்கவும்.

November 9, 2022 | 337 views |



ஜியெம்: காலம் என்பது என்ன? எங்கு உள்ளது? மாறிக்கொண்டே இருப்பது காலம் என்றால் அது எவ்வாறு உண்மையாகும்? கடந்த காலம் என்றால் என்ன? எங்கு உள்ளது? நினைவில் உள்ளது என்றால் நினைவு எங்கு உள்ளது? கடந்தது உண்மையாகுமா? அது தற்போது உள்ளதா?

Continue Reading

வணக்கம் ஜியெம், தானாகவே காலையில் விழிக்கின்றேன், தானாகவே வடிவங்கள் தென்படுகின்றன, எனது வடிவம் உட்பட, பின் தானாகவே அனைத்து நிகழ்வுகளும் என்னை சுற்றி நிகழ்கின்றன. இரவில் தானாகவே தூக்கத்தில் விழுகிறேன், தானாகவே கனவு உண்டாகிறது, தானாகவே கனவு மறைகிறது, தானாகவே ஆழ்ந்த தூக்கம் உண்டாகிறது, பின் காலையில் தானாகவே கண் விழிக்கின்றேன். தானாகவே நடந்து கொண்டு இருக்கும் இந்த பிம்ப விளையாட்டில் எனது பங்குதான் என்ன? தேவை இல்லாமல் கவலைப் படுகின்றேனே!

November 7, 2022 | 282 views |



ஜியெம்: அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என அறிந்தால், எப்படி கவலைப்பட முடியும்?  சுய அறிவு என்பதே ஆனந்தம் தானே! சுய அறிவு தன்னை தனித்த வடிவமாகவும், தன்னில் இருந்து அனைத்தும் விடுபட்டு இருப்பதாகவும் ஒப்புக் கொள்கிறது! எனவே கவலையுறுகிறது! கே: இந்த

Continue Reading

வணக்கம் ஜியெம், கனவு காண்கின்ற பொழுது நாம் அந்த கனவிற்குள் சென்று கனவை மாற்ற இயலாது ! அது போலவே விழிப்பு நிலையில் சுய அறிவு உதித்தவுடன் காலை முதல் இரவு உறங்கும் வரை இங்கே நிகழும் அத்தனை நிகழ்வுகளும் கனவே! இதில் எந்த நிகழ்வையும் என்னால் மாற்ற இயலாது….! என என்னால் சும்மா இருக்க இயலவில்லையே, சதா நிகழ்வை மாற்ற முயற்சித்து துன்புறுகிறேனே…..ஏன்?

November 2, 2022 | 451 views |



ஜியெம்: இங்கு நான் என்பது எது? காணும் நிகழ்வுகளா? நிகழ்வுகள் எங்கு நிகழ்கிறது? உன் இருப்பிலா? பர வெளியிலா? பரம் எங்கு உள்ளது? உன் நான் எனும் இருப்பில் தானே அனைத்தும் நிகழ்கிறது தற்போது! நான் எனும் இருப்பு தானாகவே நிகழ்கிறது,

Continue Reading

வணக்கம் ஜியெம், சும்மா இரு! இதை விளக்கவும்.

October 31, 2022 | 207 views |



ஜியெம்: சும்மா இரு என்றால் வெறுமனே எவ்வித ஈடுபாடும் இன்றி பார்த்தலே ஆகும். சுய அறிவானது அனைத்தையும் அடையாளம் கொள்வதால் அனைத்தையும் நிஜமெனவே ஒப்புக் கொள்கிறது.  நீ சுய அறிவுக்கும் அப்பால், பார்ப்பவர் ஆக இருக்கிறாய்! ஆயினும், பார்க்கும் நிகழ்வுகளால், தன்னை

Continue Reading