" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


வணக்கம் ஜியெம்.! விதையில் மரம் மறைந்து இருப்பது போல, சுதந்திரம் எனக்குள் மறைந்துள்ளது எனில் அது வெளிப்பட்டு வளர நான் என்ன சாதகம், பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்?

July 15, 2022 | 243 views |



ஜியெம்: உன் சுதந்திர தன்மையை அறிய எந்த சாதகமும் தேவை இல்லை. உன் சுய அறிவில் (Consciousness) நிலைத்து இருந்தால் அதுவே போதுமானது. சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது எது இங்கே? இங்கே எது உள்ளது? உன் சுய அறிவைத்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! அனைத்தில் இருந்தும் (வடிவம், எண்ணங்கள், உலகம்….) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

July 13, 2022 | 238 views |



ஜியெம்: நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் ( Consciousness) தானே? சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்! முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய

Continue Reading

வணக்கம் ஜியெம்.! நான் ஏன் எப்போதும் அவசரத்துடனும், படபடப்பாகவும் உள்ளேன்?

July 9, 2022 | 171 views |



ஜியெம்: இங்கு ' நான் ' என எதை நீ ஒப்புக் கொள்கிறாய்? வடிவம் தான் நீயா? எனில் வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? வடிவம் எப்படி இயங்குகிறது? வடிவம் எதில் தோன்றுகிறது? வடிவம் நீ என்றால், வடிவத்தின் இயக்கமும் நீயா? இயக்கமும்

Continue Reading

ஜியெம், கனவு காண்கின்ற பொழுது நாம் அந்த கனவிற்குள் சென்று கனவை மாற்ற இயலாது ! அது போலவே விழிப்பு நிலையில் சுய அறிவு (Consciousness) உதித்தவுடன் காலை முதல் இரவு உறங்கும் வரை இங்கே நிகழும் அத்தனை நிகழ்வுகளும் கனவே! இதில் எந்த நிகழ்வையும் என்னால் மாற்ற இயலாது….! என என்னால் சும்மா இருக்க இயலவில்லையே, சதா நிகழ்வை மாற்ற முயற்சித்து துன்புறுகிறேனே…..ஏன்?

July 6, 2022 | 261 views |



ஜியெம்: இங்கு நான் என்பது எது? காணும் நிகழ்வுகளா? நிகழ்வுகள் எங்கு நிகழ்கிறது? உன் இருப்பிலா? பர வெளியிலா? பரம் ( space) எங்கு உள்ளது? உன் நான் எனும் இருப்பில் தானே அனைத்தும் நிகழ்கிறது தற்போது! நான் எனும் இருப்பு

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த ஆன்மீக பயணத்தில் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?

July 2, 2022 | 301 views |



ஜியெம்: ஆன்மீகம் என்பதே, தன்னை, தன் முழுமையை அறிதலே! இங்கு நான் என்பது வடிவம் அல்ல! சுய அறிவே (Consciousness)! இந்த நான் எனும் சுய அறிவு தன்னை மாறும் வடிவமாக ஒப்புக்கொள்வ தால், தான் பிறந்ததாகவும், இங்கு நிகழும் அனைத்தும்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! இந்த சுய அறிவு ஏன் என்னை, இந்த வடிவம் தான் நீ என்றும், இந்த உலகமே உண்மை என்றும் நம்ப வைத்து, என்னை தீராத துன்பத்தில் தள்ளுகிறது? இந்த துன்பத்தை நான் எவ்வாறு களைவது? சுய அறிவின் நோக்கம் தான் என்ன?

June 29, 2022 | 240 views |



ஜியெம்: உன் சுய அறிவே இக்கேள்வியை கேட்கிறது! இங்கு நான் என்பதே சுய அறிவு தான்! வடிவம் அல்ல! வடிவம் வாயிலாக தன் இருப்பை சுயம் அறிகிறது. இதுவே சுய அறிவு. சுயம் என்பது ஒளி! ஒளியில் தானாக அணுக்கள் தோன்றி, 

Continue Reading

வணக்கம் ஜியெம்.! அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் இருமை ! அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கொடுப்பது…. இரண்டற்ற, இருமையற்ற ஒன்றே அதற்கு சரியான வழி என்கிறீர்கள் – ஆனால் நான் காலை கண்ணை திறந்ததிலிருந்து எனக்கு இந்த இருமையே காட்சி அளிக்கிறது… இரவு முடிய…! அப்படி இருக்க நான் எவ்வாறு இருமையை கடப்பேன்?

June 25, 2022 | 290 views |



ஜியெம்: கண் விழிப்பதில் இருந்து உறக்கம் வரை நிகழும் நிகழ்வுகள் எங்கே நிகழ்கிறது? பர வெளியில் நிகழ்கிறது எனில், பரமெங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் தானே? முதலில் நீ அறிய வேண்டியது.... உன் நான் எனும் சுய அறிவே

Continue Reading

வணக்கம் ஜியெம்.! புறத்தளவில், நடைமுறை வாழ்க்கைக்கு ஏதாவது வழிகாட்டுதல் உண்டா அல்லது தேவையில்லையா என்பதை விளக்க வேண்டுகிறேன்.

June 21, 2022 | 215 views |



ஜியெம்: புறம் என்பது என்ன? தற்போது கண்களை திறந்து இங்கே பரவெளியில் ( space ) காண்பதே! புறம் என்று ஒன்று தனித்து இல்லை! அகமே புறமாக பிரதிபலிக்கிறது இங்கே! புறத்தில் காணும் காட்சிகள் அனைத்தும் எங்கிருந்து தோன்றுகிறது? உள்ளிருக்கும் அகத்தின்

Continue Reading

வணக்கம் ஜியெம்.! நான் பார்ப்பவராக (Observer) இருக்க முயற்சிக்கின்றேன்…….. ஆயினும் அது ஏராளமான கற்பனைகளுடன் முடிகிறது.

June 19, 2022 | 180 views |



ஜியெம்: இங்கு ஏற்கனவே பார்ப்பவர் நீ தானே? அப்படியிருக்க, உன்னால் எப்படி பார்ப்பவராக முயற்சிக்க முடியும்? இது, ஒரு மலர், தான் மலர் ஆக முயற்சிப்பது போல தான். எதை நீ பார்ப்பவர் என்கிறாய்? பார்ப்பவர் அமைதியாக பார்க்கிறார். பார்ப்பவர் வார்த்தைகளுக்கு

Continue Reading

வணக்கம் ஜியெம்.! விழிப்புணர்வு நிலை அறிந்த உடன், அறியாமையில் உள்ளவர்களை விழிப்புணர்வு நிலையில் உள்ளவர் எவ்வாறு அவர்களுக்கு உணர செய்வார்? தான் உணர்ந்ததை பகிர முடியாமல் போகும்போது என்ன நிகழும் ?

June 15, 2022 | 263 views |



ஜியெம் : விழிப்பில்.... உணர்வுகள் நிகழ்கிறது. உணர்வுகள் நீ அல்ல! இந்த விழிப்பு (Consciousness) தன்னை அறிதல், தன் முழுமையை (Absolute, Wholeness) அறிதல் அவசியமாகிறது. தன் முழுமை அறிந்து ஆனந்தத்தில், அமிர்த நிலையில், நிலை கொண்ட குரு அமைதியாகவே இருப்பார்.

Continue Reading