" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


வணக்கம் ஜியெம், உலகத்திற்கும் அதன் நிகழ்வுகளுக்கும் முக்கியம் கொடுக்காமல், நான் ஏன் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

October 1, 2022 | 215 views |



ஜியெம் : உலகம் எங்கே உள்ளது? உன்னுடைய நான் எனும் இருப்பில் தான்..... உடலும், மனமும், உலகமும், அனைத்து காட்சிகளும் தோன்றுகிறது. இந்த நான் எனும் இருப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. உன்னுடைய இருப்பின் அமைதியில்..... அனைத்தும் தோன்றுகிறது.. இதை அறிந்தால் முதலில்

Continue Reading

வணக்கம் ஜியெம், முழுமை என்பது என்ன? எப்போது எப்படி உணரப்படுகிறது? என்பதை தெளிவுபடுத்தித் தாருங்கள்.

September 28, 2022 | 209 views |



ஜியெம் : முழுமையை விளக்க இயலாது. வடிவங்களுக்கு... வார்த்தைகளுக்கு... அப்பாற்பட்ட நித்தியம். முழுமை- இருமை அற்றது. அனைத்து தோற்றங்களும், நிகழ்வுகளும்,வார்த்தைகளும் இருமை நிலையில்  தற்போது  நிகழ்கிறது. இக்கேள்வி இருமை நிலையில் எழுகிறது. பதிலும் இருமை நிலையில் கொடுக்கப்படுகிறது. இக்கேள்வியை உன் சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், கடந்த காலம் என ஒன்று இல்லவே இல்லை…. இக்கணமே புதிதாய் பிறந்துள்ளோம்…. இதை விளக்கவும்.

September 24, 2022 | 240 views |



ஜியெம்: காலம் என்பது என்ன? எங்கு உள்ளது? மாறிக்கொண்டே இருப்பது காலம் என்றால் அது எவ்வாறு உண்மையாகும்? கடந்த காலம் என்றால் என்ன? எங்கு உள்ளது? நினைவில் உள்ளது என்றால் நினைவு எங்கு உள்ளது? கடந்தது உண்மையாகுமா? அது தற்போது உள்ளதா?

Continue Reading

வணக்கம் ஜியெம், ஒரு முறை அறியப்பட்ட ஞானம் நழுவுமா. அப்படி சகஜமாய் எந்தவித முயற்சியும் இல்லாமல் இருப்பில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

September 21, 2022 | 204 views |



ஜியெம்: இங்கு சுய அறிவே ஞானம் எனப்படுவது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! எல்லை அற்றது. வடிவத்திற்கு அப்பாற்பட்டது. தற்போது இந்த கேள்வியும் சுய அறிவே கேட்கிறது வடிவம் வாயிலாக! உனது இருப்பு அமைதி நிலையில் உனக்கு தெரியு மல்லவா? இதுவே சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த சுய அறிவு ஏன் என்னை, இந்த வடிவம் தான் நீ என்றும், இந்த உலகமே உண்மை என்றும் நம்ப வைத்து, என்னை தீராத துன்பத்தில் தள்ளுகிறது? இந்த துன்பத்தை நான் எவ்வாறு களைவது? சுய அறிவின் நோக்கம் தான் என்ன?

September 17, 2022 | 191 views |



ஜியெம்: உன் சுய அறிவே இக்கேள்வியை கேட்கிறது! இங்கு நான் என்பதே சுய அறிவு தான்! வடிவம் அல்ல! வடிவம் வாயிலாக தன் இருப்பை சுயம் அறிகிறது. இதுவே சுய அறிவு. சுயம் என்பது ஒளி! ஒளியில் தானாக அணுக்கள் தோன்றி,

Continue Reading

வணக்கம் ஜியெம், விழிப்பு நிலையில் நான் யார் என்று தன் சுயத்தை (சுய அறிவை) அறிந்து கொள்வது போன்று, ஆழ்ந்த உறக்க நிலையில், உணர்வை (தன்னை) உணர முடியாமல் தன்னிலை மறந்து போவது ஏன்?

September 15, 2022 | 196 views |



ஜியெம்: சுயம் என்றும் இருக்கிறது. அது தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. அந்த ஊடகம் தான் வடிவங்கள். சுயத்திலிருந்து தானாக தோன்றும் அணுக்களின் தொடர் வினையால் இந்த வடிவம் நிகழ்கிறது தற்போது! இந்த வடிவம் வழியாக தன் இருப்பை

Continue Reading

வணக்கம் ஜியெம், இங்கு அனைவரையும் இயக்குவது எது?

September 9, 2022 | 237 views |



ஜியெம்: இங்கு அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? உன் சுய அறிவில் தானே? உன் சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என நீ அறிவதே இல்லை. ஏனெனில், உன்னை ஒரு தனித்த வடிவமாகவே அடையாளம் கொள்கிறாய்! வடிவம் எதில் தோன்றுகிறது? உன்

Continue Reading

வணக்கம் ஜியெம், முழுமை என்பது என்ன? எப்போது எப்படி உணரப்படுகிறது? என்பதை தெளிவுபடுத்தித் தாருங்கள்.

September 7, 2022 | 245 views |



ஜியெம்: முழுமையை விளக்க இயலாது. வடிவங்களுக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நித்தியம். முழுமை - இருமை அற்றது. அனைத்து தோற்றங்களும், நிகழ்வுகளும்,வார்த்தைகளும் இருமை நிலையில் தற்போது நிகழ்கிறது. இக்கேள்வி இருமை நிலையில் எழுகிறது. பதிலும் இருமை நிலையில் கொடுக்கப்படுகிறது. இக்கேள்வியை உன் சுய

Continue Reading

வணக்கம் ஜியெம், தன்னை தான் அறிதல் என்றால் என்ன?

September 2, 2022 | 212 views |



ஜியெம்: இக்கேள்வியை கேட்பதே உன் சுய அறிவு தான் ! உன் சுய அறிவு வடிவங்களுக்கு அப்பாற்பட்டது ! ஆயினும் தன்னை வடிவமாகவே ஒப்புக் கொள்கிறது. தான் வடிவம் என ஒப்புக் கொள்வதால், தன் பிறப்பை ஒப்புக் கொள்கிறது. பிறப்பை ஒப்புக்

Continue Reading

வணக்கம் ஜியெம், என்னுடைய அடையாளம் என்று எதை சொல்கிறீர்கள்?

August 31, 2022 | 202 views |



ஜியெம் : அடையாளங்கள் அனைத்தும் சார்புத்தன்மை உடையது. அடையாளங்கள் அனைத்தும் பொருளுக்கே! நீ பொருட்களுக்கு அப்பாற்பட்ட அற்புதம்! தோற்றம் மறைவுக்கு அப்பாற்பட்ட உன்னதம். ஆரம்பமும், முடிவும் இல்லாத நித்தியம். இதை நீ அறிவதே இல்லை! உன் இருப்பு எப்போது அறியப்படுகிறது? உறக்கத்திலா?

Continue Reading