" நீயே பரிபூரண நித்தியம் "

Blog


அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் இருமை ! அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கொடுப்பது…. இரண்டற்ற, இருமையற்ற ஒன்றே அதற்கு சரியான வழி என்கிறீர்கள் – ஆனால் நான் காலை கண்ணை திறந்ததிலிருந்து எனக்கு இந்த இருமையே காட்சி அளிக்கிறது… இரவு முடிய…! அப்படி இருக்க நான் எவ்வாறு இருமையை கடப்பேன்?

December 13, 2022 | 196 views |



ஜியெம்: கண் விழிப்பதில் இருந்து உறக்கம் வரை நிகழும் நிகழ்வுகள் எங்கே நிகழ்கிறது? பர வெளியில் நிகழ்கிறது எனில், பரமெங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் தானே? முதலில் நீ அறிய வேண்டியது.... உன் நான் எனும் சுய அறிவே...

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்? விழிப்பின் அவசியம் என்ன? எதற்காக விழிக்க வேண்டும்?

December 10, 2022 | 289 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான்  தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா தற்போது?

Continue Reading

வணக்கம் ஜியெம், இந்த “நான்” என்ற அறிவு எதனுடனும் சம்பந்தம் வைக்காமல், தன்னில் தானாய் தனித்து இருப்பது எனும் போது, அது எப்படி தோன்றி மறையும் வடிவத்தையும், உணவையும் சார்ந்து இருக்க முடியும்!….? இந்த இடம் என்னை சற்று குழப்புகிறது. தயவுசெய்து, மேலும் என்னை தெளிவுபடுத்த வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

December 7, 2022 | 196 views |



ஜியெம்: சுய அறிவு எல்லையற்றது! வடிவமற்றது. இந்த பரந்த, விரிந்த சுய அறிவு தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. சுய அறிவு வடிவத்தை படைத்து வடிவம் வழியாக 'நான் இருக்கிறேன்' என தன் இருப்பை அறிகிறது. வடிவத்திற்கு முன்பே

Continue Reading

வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்?விழிப்பின் அவசியம் என்ன?எதற்காக விழிக்க வேண்டும்?

December 3, 2022 | 207 views |



ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது. இங்கு நான் என்பது எது? தனித்த வடிவமா? வடிவம்தான் நீ எனில், இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்? உன் சுய அறிவில்தான் தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது... உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா தற்போது?

Continue Reading

வணக்கம் ஜியெம், எது அறிவு?

November 30, 2022 | 194 views |



ஜியெம்: அறிவு என்பது பொருள் சார்ந்தது அல்ல! தன்னை பற்றிய அறிவு, தன் இருப்பை பற்றிய அறிவு. அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் அல்லவா? இந்த இருப்பை பற்றிய அறிவு. நான் இருக்கிறேன் அமைதி நிலையில் என்கிற அறிவு. நான்

Continue Reading

நான் சில விஷயங்களை மறக்க நினைக்கிறேன். ஆனால் என்னை சுற்றிருப்பவர்களால் மீண்டும் அந்த நினைவுகளால் பாதிக்கப்படுகிறேன். இதை கடந்து செல்வது எப்படி?

November 25, 2022 | 248 views |



ஜியெம்: இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது? இங்கு நான் என்பது உன் வடிவம் தான் என்கிற அடையாளத்தில் தான்....... இல்லையா? உனது வடிவம் எவ்வாறு அறியப்படுகிறது? உன் சுய அறிவில் தானே? உன் வடிவம் மட்டுமன்றி, அனைத்து வடிவங்களும், காட்சிகளும், நிகழ்வுகளும்

Continue Reading

வணக்கம் ஜியெம், பிரபஞ்சம், உலகம், காணும் வடிவங்கள் அனைத்தும் நிஜமாக தோன்றுகிறதே, இவையெல்லாம் எப்படி கனவாகும்,எனது வடிவம் உட்பட?

November 23, 2022 | 200 views |



ஜியெம்: உலகம் எங்கே உளது? உன் சுய அறிவில் தானே! உன் சுய அறிவில் தான் பிரபஞ்சம், கோள்கள், அனைத்து வடிவங்களும் நிகழ்கிறது என முதலில் அறியவும். தனித்த அடையாளத்தில் தடுமாற்றமே! உன் சுய அறிவில் தான் இங்கு அனைத்தும் நிகழ்கிறது

Continue Reading

வணக்கம் ஜியெம், அனைத்தில் இருந்தும் ( வடிவம், எண்ணங்கள், உலகம்…) என்னை நீங்கள் விடுவிக்க முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

November 19, 2022 | 299 views |



ஜியெம்: நீ காணும் அனைத்தும் எங்கு உள்ளது? நான் எனும் சுய அறிவில் தானே? சுய அறிவின்றி, இங்கு எதுவும் இல்லை என முதலில் அறியவும்! முதலில் சுய அறிவு என்பது தன்னை பற்றிய தன் இருப்பை பற்றிய அறிவு என

Continue Reading

வணக்கம் ஜியெம், விதையில் மரம் மறைந்து இருப்பது போல, சுதந்திரம் எனக்குள் மறைந்துள்ளது எனில் அது வெளிப்பட்டு வளர நான் என்ன சாதகம், பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்?

November 16, 2022 | 321 views |



ஜியெம்: உன் சுதந்திர தன்மையை அறிய எந்த சாதகமும் தேவை இல்லை. உன் சுய அறிவில் (Consciousness) நிலைத்து இருந்தால் அதுவே போதுமானது. சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது எது இங்கே? இங்கே எது உள்ளது? உன் சுய அறிவைத்

Continue Reading

வணக்கம் ஜியெம், அத்துவிதமே அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு என்கிறீர்கள்..இதை எப்படி என சற்று விளக்குவீர்களா?

November 12, 2022 | 284 views |



ஜியெம்: அத்துவிதம் என்பது இருமையை கடந்த நிலை! பார்க்கும் நீ... பார்க்கும் இருமை நிலைக்கும் அப்பால்... எப்பொழுதும்! பார்க்கும் நீ... எப்பொழுதும் பரிபூரணம்! பார்க்கும் நீ... எப்பொழுதும் நித்தியம்! பார்க்கும் உனக்கு... எப்பொழுதும் பாதிப்பில்லை.! இருப்பினும் தற்போது உன் இருப்பை 'நான்

Continue Reading