" பரிபூரண நித்தியம் நீயே !"

அமைதி !

March 22, 2022 | 196 views

மௌனம் வேறு!

அமைதி வேறு!

வாய் மூடி மௌனித்தாலும் உள்ளே நிறைய ஓசை கேட்கும்.

பூரண அமைதி , வெளியில் நிகழும் ஓசைகளால் பாதிப்பு அடையாது.

கேட்டல் நிகழும்!

பாதிப்பு இருக்காது.

செயல்கள் தானாக நிகழும்!

பாதிப்பு இருக்காது….

அறிவின் ஆரம்ப நிலை.

இதுவே பூரண அமைதி!

இந்த அறிவின் ஆரம்ப நிலையிலேயே தங்கி செயல்பட்டால்……

அனைத்திற்கும் விடை கிடைக்கும்………..

விழிப்பு நிச்சயம்.!